சென்னை மருத்துவர் முதல் செவிலியர்கள் வரைக்கும் ஏற்பட்டு வரும் இந்த செயல் கொரோனா களபணியாளர்களை அவமதிக்க செய்து வருவதாக உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை ( நேற்று ) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி திங்கட்கிழமை காலை ( இன்று ) செவிலியரின் உடல் அடக்கம் செய்ய கல்லறை தோட்டத்துக்கு எடுத்து வரப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் சுகாதார பணியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை ( நேற்று ) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி திங்கட்கிழமை காலை ( இன்று ) செவிலியரின் உடல் அடக்கம் செய்ய கல்லறை தோட்டத்துக்கு எடுத்து வரப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் சுகாதார பணியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் தொடர்ந்து உடலை அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவின் பிடியால் சிக்காமல் மக்கள் வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சமூக பணியை ஏற்று, தொற்றுடன் போராடி வரும் செவிலியர்கள், மருத்துவர்கள் இறக்க நேரிடும் சூழலில் அவர்களது தியாகத்தை பொருட்படுத்தாமல் உடல்களை அடக்கம் செய்யாமல் தடுக்கும் பொதுமக்களின் செயல்கள் வேதனை அளித்துவருவதாக சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனாவின் பிடியால் சிக்காமல் மக்கள் வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சமூக பணியை ஏற்று, தொற்றுடன் போராடி வரும் செவிலியர்கள், மருத்துவர்கள் இறக்க நேரிடும் சூழலில் அவர்களது தியாகத்தை பொருட்படுத்தாமல் உடல்களை அடக்கம் செய்யாமல் தடுக்கும் பொதுமக்களின் செயல்கள் வேதனை அளித்துவருவதாக சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.